புதன், 25 அக்டோபர், 2017

அமுதும் நஞ்சும்

தமிழ்த் தேசியம் நிர்வாணத்தை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டது. என்னதான் போதிசத்வர் நார்த் இண்டியன் என்றாலும் சித்தர்களின் ஆளுமை ஒரு காலத்தில் இந்தத் தேசியத்தில் இருந்த வகையில் மகா நிர்வாணத்தை நோக்கி இது நகரும் என்று ஒரு நப்பாசை இருந்தது. ஆனால் அவர்களுக்குத் தெரியாது, சினிமா என்று ஒரு மாயையில் இத்தேசியம் சிக்குறும் என்பதும், அது மகாவைக்கூட நிர்வாணமாக்க முயலும் என்பதும். நிர்வாணமே சாத்தியமில்லாதபோது மகாநிர்வாணம் எப்படி சாத்தியமாகும்?

நிர்வாணம் மிகமிக அழகானது அல்லது மிக மிக அசிங்கமானது. அதை எந்த வகைமையில் சேர்க்கலாம் என்பது சம்பந்தப்பட்ட உடலைப் பொறுத்தே அமைகிறது. சிங்கத்தின் நிர்வாணம் எவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறது! அதே நேரத்தில் கவர்ச்சி நடிகை ஷகீலாவின் நிர்வாணம் முழுமையாக உங்களுக்குக் காணக் கிடைத்தால் அது கண்டிப்பாக, கவர்ச்சிக்கு பதிலாகக் குமட்டலையே ஏற்படுத்தக்கூடும். ஏனென்றால் க்ளிவேஜின் பிதுங்கலில் உள்ள கவர்ச்சி, தொய்ந்த மார்பகங்களிலும் இடுப்புச் சதைகளிலும் இல்லவே இல்லை. இதுவே சினிமாவின் அடிப்படை மொழி!

Irreversible என்று ஒரு படம். படம் முழுக்க முழுக்க காமத்தை அடிப்படையாகக் கொண்டது. படத்தின் முதல் காட்சியில் எண்பது வயது மதிக்கத் தக்க ஒரு முதியவர் தனிமையின் அறையில் காமத்தின் பிடியில் கையறு நிலையில் நிர்வாணமாக உட்கார்ந்திருக்கிறார். எமது தமிழ் சினிமாவில் இவ்விதமான நிர்வாணத்தைக் காட்ட யாருக்காவது துணிச்சல் இருக்கிறதா? அது கூட வேண்டாம், மிக அழகான யுவதியொருத்தியாகவே அது இருக்கட்டும், அவளை நிர்வாணமாகக் காட்ட இங்கே யாருக்குத் துணிச்சல் இருக்கிறது? அவர்கள் யாருக்கு பயப்படுகிறார்கள், சம்பந்தப்பட்ட நடிகைக்கா, சென்சாருக்கா, பார்வையாளனுக்கா, பெண்ணியவாதிகளுக்கா அல்லது தங்கள் வீட்டிலுள்ள பெண்களுக்கா?

உண்மையில் அவர்கள் பயப்படுவது தங்களுக்குள் உட்கார்ந்திருக்கும் வியாபாரிக்குத்தான். முழு நிர்வாணம் வெளிப்படுத்தப்படுவது முதல் ரீலிலேயே க்ளைமாக்ஸ் வந்துவிடுவதைப் போன்றது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். சினிமாவைக் கலையாகப் பார்க்க இங்கே ஒரு நாதியும் இல்லாததே இதற்கான காரணம்.

ஆதாம் ஏவாள் கதையைத் தமிழில் எடுக்க நேர்ந்தபோது (தமிழ்நாடு எந்தக் கண்டத்தில் இருக்கிறது என்கிற பிரக்ஞையில்லாத காரணத்தால் நேர்கிற அவஸ்தை இது) அபிலாஷா என்று ஒரு நடிகை இவ்விதமாக நடிக்க முன்வந்தார் என்பதாக பரபரப்பாக ஒரு கலவர காலம் இருந்தது. Nuditiy என்பதற்கும் Hardcore sex என்பதற்கும் ஊடான இடைவெளியை ஒருபோதும் உணராத தமிழன் திரும்பத் திரும்பக் காயடிக்கப்படுகிற கண்ராவி இது. ஆஞ்சலினா ஜோலியும் ஆன்டோனியா பென்டாரஸும் Original Sin படத்தில் உறுப்புகள் மட்டும் காட்டப்படாத டபுள் எக்ஸ் ஹார்ட்கோர் காட்சியில் மிக லாவகமாக நடித்திருப்பார்கள். அது அவர்களின் கலாச்சாரம் என்று கதைப்பவர்களை ஒதுக்குங்கள், உங்கள் கலாச்சாரம் மட்டும் கலவியில் ஈடுபடுவதைப் பாவம் என்றா சொல்கிறது! அப்புறம் கலாச்சாரக் காவலர்கள்கூட பிறக்க வகையில்லாது போகும் என்பதை மறந்துவிடக்கூடாது!

படிப்பு, வேலை, ஆடை என்று அத்தனை விதத்திலும் வேறு கலாச்சாரத்தை நாம் ஏற்றுக்கொண்டாயிற்று. செல்போன்கள் என்கிற பெயரில் நாடெங்கும் ஹிடன் கேமராக்கள் அலைகின்றன. தனது புணர்வு நிகழ்வைத் தானே பார்க்க ஒரு பெண் ஒப்புவாளா என்கிற நிலைப்பாடு இப்போது மாறுபடுகிறது. Sliver எனும் ஹாலிவுட் படத்தில் ஷெரான் ஸ்டோன் இவ்விதமாக தன் முந்தைய நாளிரவில் தானறியாமல் பதிவு செய்யப்பட்ட டேப்பை மிகுந்த ஆசையோடு பார்க்க நேர்வதாக வந்தபோது நாமுணர்ந்த அதிர்ச்சி இப்போது இருக்கிறதா?

காதலனோடான முயக்கத்தை முழுப் பிரக்ஞையோடு படமாக்க ஒப்பும் எமது காதலிகள் வஞ்சகமாகவோ ஒப்புதலோடோ இன்டர்நெட்டில் கொட்டி வைக்கப்பட்டுள்ள காலத்திலிருந்து இதை எழுதுவதில் நான் எந்தத் தயக்கமும் கொள்ளவேண்டியதில்லை.

கோவில் சிலைகளில் கண்ட நிர்வாணங்கள் அந்த உடல்களின் வடிவ அழகையே நுகரவைத்திருந்தன. ஏனென்றால் அந்தமாதிரி உடல்கள் நிகழ்காலத்தில் அபூர்வமாகவே எதிர்ப்படும். அல்லது எதிர்ப்படவே படாது! பிற்பாடு ஜனரஞ்சக வார இதழ்களில் ஜெயராஜ் என்றொரு ஓவியர் அறிமுகமாகி ஒருவிதமான கிளர்ச்சியை ஏற்படுத்த முனைந்தார். அதாவது அவர் வழக்கமாக நிர்வாணமாக ஒரு உருவத்தை வரைந்துவிடுவார். அதன் ஷேப்பிற்கு எவ்விதமான பங்கமும் வராதவண்ணம் அதன்மீது புடவையோ, சல்வாரோ, ஜீன்ஸோ, டீஷர்ட்டோ இருப்பது போல ஒருசில கோட்டுவித்தைகள் புரிவார். பார்க்கவே ஆசை ஆசையாக இருக்கும். பனியன் வாசகங்களின் தமிழ்த்தேய மூதாதை அவர்! அந்த வாசகங்களும் ஓவியங்களும் அந்த நாட்களில் எவ்விதமான ஈர்ப்பை ஏற்படுத்தினவோ அதைத்தான் இப்போது தமிழ் சினிமா காஸ்ட்யூமர்கள் செய்து கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். (இதனால்தான் ஜெயராஜை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பத்திரிகைகள் நிஜ உடல்களின் டிஜிட்டல் பிரதிகளை பக்கத்துக்குப் பக்கம் நிரப்புகின்றன.) அதாவது இரண்டு அல்லது மூன்று சைஸ் சின்ன உடையாகத் தைப்பது அவர்களின் வழக்கமாகிவிட்டது. திணிப்புகள் வேறு கதை. ஆனால் நடிகை ஓடிவருகிற காட்சியானால் அப்படியே தலைகீழ். உள்ளாடை வரைக்கும் இரண்டு சைஸ் பெரியதாக இருக்க வேண்டும். இல்லையானால் பார்வையாளனின் பார்வைக்கு விருந்தில்லாது போகும்!

நமீதாவாகட்டும், நேரெதிர் ஒல்லிப்பிச்சான் நடிகையாகட்டும், க்ளிவேஜ்களின் அதிகபட்ச ஆழம், தொடைகளின் அதிகபட்ச உயரம், தொப்புளுக்குக் கீழே மேக்ஸிமம் இன்ச் என்றுதான் எமது காஸ்ட்யூமர்கள் அனுமதிக்கப்படுகிறார்களே தவிர, அவர்களுக்கு முற்றிலும் வேலையில்லாமல் போகும்விதமாக ஆகிவிடக்கூடாதே; அப்புறம் அவர்களின் பிள்ளை குட்டிகளின் கதி என்னவாவது என்பதாக எமது சினிமா கொண்டிருக்கிற அக்கறை இருக்கிறதே, அது அதி உவப்பானது அதற்கும் பங்கம் வரும்போது காஸ்ட்யூமர்கள் கண்டிப்பாக நிர்வாணத்தைத்தான் எய்த வேண்டும்!

இதில் இன்னொரு குறிப்பிடத்தகுந்த அயோக்கியத்தனம் என்னவென்றால், அரை நிர்வாண ஸ்டில்களின் தயவால் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் அதே வணிக இதழ்கள்தான், ஒரு நடிகை நிர்வாணமாக நடிக்கலாம் என்று யாருக்கும் தெரியாமல் மனதிற்குள் யோசித்தால்கூட நிர்வாண நடிகை, ஆபாச நடிகை என்றெல்லாம் அவதூறு பரப்ப ஆரம்பித்துவிடவும் செய்வது! ஏனென்றால் நிர்வாணம் பழகிவிட்டால் வேறு எதைக்கொண்டும் அவர்களால் பத்திரிகை நடத்த முடியாது. இந்த அநியாயத்தைக் கேட்பாரில்லையா என்று கேட்பார் இல்லவே இல்லை.

சேதுவில் அறிமுகமான அபிதா, ஒரு மலையாளப் படத்தில் கதைத் தேவைக்காக நடித்த ஒரு சாதாரணக் காட்சியை, நிர்வாணக் காட்சி என்று வரையறுத்து அந்தப் பெண்ணை ஃபீல்டை விட்டே ஓட்ட முயன்றதும் சினிமாக்காரர்கள் அல்ல, பத்திரிகைக்காரர்கள்தான்! அட்டை இல்லாமல் பத்திரிகை வந்தால் எவ்வளவு அசிங்கமாக இருக்குமோ அவ்வளவு அசிங்கம் ஆடை இல்லாத பெண் என்பதைப்போன்ற மூளைச்சலவையை அவை தொடர்ந்து செய்தே வருவதும் சினிமாக்காரர்கள் நிர்வாணத்தை நினைத்து நடுங்குவதற்கான உபாயமாகிப்போகிறது.

ஜம்பு எனும் பழைய திரைப்படத்தில் ஜெயமாலா எனும் நடிகை வெற்று மார்பில் ஒற்றை முந்தானையைப் போட்டுக்கொண்டு தண்ணீரில் நனைகிற காட்சி தமிழின் அறுந்த ரீலாக அறியப்படுவது! ஏனென்றால் முலைக்காம்புகள் அதுவரை தமிழனுக்கு தமிழ்த்திரையில் காணக் கிடைத்ததேயில்லை. அந்தக் காட்சியோடு இந்தியில் ராஜ்கபூரின் ராம் தேரி கங்கா மெய்லி திரைப்படத்தில் மந்தாகினி நீரில் நனைந்த காட்சியை ஒப்பிட்டு நோக்கின், படைப்பாளனின் நேர்மை விளங்கும். ஜம்பு திரைப்படத்தில் இயக்குனர் கம் காமிரா மேன் கர்ணன் முலைக்காம்பைக் காட்சிப்படுத்துவதையே கொள்கையாகக் கொண்டு செயல்பட்டிருப்பார். ஆனால் ராஜ்கபூரின் கதை வேறு. முலைக்காம்புகளின் அழகால் வசீகரிக்கப்பட்ட கலாமனம் அவருடையது! தேர்ந்த பார்வையாளனால் இந்த வித்தியாசத்தை எளிதில் உணர முடியும்.

கேமராவுக்கு முன்னால் உள்ளாடை அணிந்த நிலையில் இரு துடைகளையும் விரித்துக்காட்டிய எமது கவர்ச்சி நாட்டிய நடிகைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய காலம் இப்போது இல்லை. ஏறக்குறைய எல்லா நடிகைகளுமே இதைச் செய்ய வேண்டிய காலகட்டம் இது. இதைவிடவா முலைக்காம்புகளின் வசீகரம் அசிங்கமானது? பாரதிராஜாவின் முதல் மரியாதையில் நமக்கு ஏற்பட்ட தவிப்பு ராஜ்கபூரின் சத்யம் சிவம் சுந்தரத்தில் ஏற்பட்டிருக்கவில்லை. இதிலிருந்து இயக்குனரின் பார்வையைக் கொண்டுதான் பார்வையாளனால் படத்தைப் பார்க்க முடிகிறது என்பதையே நாம் உணர வேண்டும்.

தற்போது வேலு பிரபாகரன் ஒரு சிறுமியை நிர்வாணமாகக் காட்டப்போகிறார் என்று ஒரு செய்தி பத்திரிகைகளுக்கு உவப்பாக இருக்கிறது. வேலு வழங்கிய தாராள ஸ்டில்லை அப்பட்டமாக வெளியிடுகிற அதே ஆசிரியர் குழு, கட்டுரையின் ஊடாக அவரது முயற்சியை நையாண்டி செய்யவே விரும்புகிறது. ஏதோ உங்கள் விருப்பத்துக்காக ஒரு ஸ்டில்லைக் கொடுத்துவிட்டோம், எங்கள் விருப்பமோ அதற்கு நேர்மாறானது என்பதைப்போல ஒரு மாயையை அவை நிறுவ முயல்கின்றன. மனதாலும் பிழை விழையான் என்கிற போர்வையைப் போர்த்தியவாறு பக்கத்து வீட்டு பாத்ரூமில் எட்டிப்பார்க்க விளைகிற ஆசை இது.

ஏனென்றால் நிர்வாணத்தைப் பார்க்கவே எல்லோரின் மனமும் விளைகிறது. ஆனால் பார்ப்பதைப் பிறர் அறிந்துவிடலாகாது செக்ஸ் படங்கள் என்பதாக அறியப்படுகின்ற சில படங்களை வெளியிடுவதற்கென்றே பல்வேறு திரையரங்கங்கள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கின்றன. தலையில் முக்காடு போட்டுக்கொண்டு வயது வித்தியாசமில்லாமல் சலூன்கள் போல ஆண்கள் மட்டும் அங்கே போகிறார்கள்.

ஆரம்பத்தில் செக்ஸ் படங்கள் என்றாலே மலையாளப்படங்கள் என்பதைப்போன்ற மாயை இருந்தது. உண்மையில் அவளுடெ ராவுகள், மழு ஆகிய படங்கள் அவ்வகையினவை என்பதாக நாம் நம்பினோம். உண்மையில் அவளது இரவுகள் என்பதாகப் பொருள்படும் அவளுடெ ராவுகள் ஒரு க்ளாஸ் ஃபிலிம். இயக்குனர் ஐவிசசி வாயிலாக அந்தப் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சீமா நமது ஷோபாவுக்கு இணையான பர்ஃபார்மென்ஸில் அசத்தியிருப்பார். ஆனால் உள்ளாடைகள் இல்லாத நிலையில் நாயகனின் ஒற்றை சட்டையை அணிந்து அவர் வலம் வரும் ஒரு காட்சிக்காகவே சுட்டாலும் மலையாளம் வராத தமிழர்களால் திரும்பத்திரும்பப் பார்க்கப்பட்டு, படம் சக்கைப்போடு போட்டது. வெறும் சட்டையை மட்டும் அணிந்து அதன் கீழ் மடிப்பை உயர்த்தி தொடையைப் பரிசோதிக்கும் சீமாவின் ஸ்டில் மௌண்ட் ரோட்டில் விபத்துகளை நிகழ்த்தியது.

மழுஎன்றால் மலையாளத்தில் மட்டுமல்ல, நல்ல தமிழிலும் கோடாரி என்பதுதான் அர்த்தம். அந்தப்படத்தை மாமனாரின் இன்பவெறி என்று தமிழ்ப்படுத்திய வக்கிரம்தான் ஆபாசமே தவிர, அந்தப்படம் ஆபாசமானதல்ல.

ஆனால் இவை காட்டிய திசையில் பிற்பாடு வெளிவந்த செக்ஸ் அல்லது பிட் படங்கள் மலையாளப் படங்கள் என்பதாகவே நாம் அறிந்திருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை ஷூட் செய்யப்பட்டது கோடம்பாக்கத்தில்தான்! இது நம்மில் பலருக்கும் தெரியாது. இந்த அவதூறைத் தாண்டித்தான் மலையாளப்படம் சிலிர்த்தெழுந்தது. இங்கே அதுமாதிரி எதுவும் நிகழவேயில்லை.

சிமி அகர்வால், அனு அகர்வால் என்று ஹிந்தியிலும் இந்திய ஆங்கிலப் படங்களிலும் ஒரு சில ஆடை துறந்த நிலைப்பாட்டை வட இந்திய நடிகைகள்தான் முயன்றார்கள். இருந்தாலும் நமது தமிழில் துணிந்த தவமணிதேவியையும் நாம் மறந்துவிடக்கூடாது.  அப்புறம் அரங்கேற்றத்தில் பிரமீளாவின் முதுகும் அதன்மீது தூவப்பட்ட ரூபாய் நோட்டுகளும் எவ்விதமான அதிர்ச்சியை பார்வையாளர்களுக்கு ஊட்டவேண்டும் என்று இயக்குனர் விரும்பினாரோ அதை நல்கவே செய்தது.

கமலஹாசன் ஆசைப்பட்ட மருதநாயகம் வந்திருந்தால் ஓர் ஆண்பிள்ளை நிர்வாணம் தமிழ்ப்பெண்டிருக்குக் காணக் கிடைத்திருக்கும்! என்ன செய்வது, அவர்கள் வாங்கிவந்த வரம் அவ்வளவுதான்! ஆனாலும் ஆர்ப்பாட்டமாகத்தான் அக்காட்சி இருந்திருக்கும்! மம்முட்டியை சூப்பர்ஸ்டாராக்கிய யாத்ரா எனும் பாலுமகேந்திராவின் மலையாளப்படம் திரும்பவும் கன்னடத்தில் அவராலேயே எடுக்கப்பட்டபோது அதில் பானுச்சந்தர் ஒரு காட்சியில் முழு நிர்வாணமாக நடித்திருப்பார். எந்த உறுத்தலும் இருக்காது. இந்தப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்தது.

பெண்களைப் பொருத்தவரை தவமணி தேவிக்குப் பின்னுதாரணங்கள் ஏன் சொல்ல இயலவில்லை என்றால், பிழை, மீடியாக்கள் முதலான குறுகலான பார்வை கொண்ட சமூகத்தின் வசம்தான் இருக்கிறது என்பதே நாம் கண்டடைவது!

இருந்தாலும் திரையைக் கிழித்துக்கொண்டு நிர்வாணம் வெளிப்படப்போகும் காலம் வெகு தொலைவில் இல்லை. பாவம், காஸ்ட்யூமர்கள்தான் கவனமாக இருக்கவேண்டும

நன்றி.
சுதேசமித்திரன்.

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

புகழ் பெற்ற எழுத்தாளர்கள் எழுதும் முறை

புகழ் பெற்ற எழுத்தாளர்கள் எழுதும் விதம்!

எழுத்தாளர் ஆல்க்ரென்

ஆல்க்ரென் எனும் எழுத்தாளர், சில சுவையான சம்பவங்களை மட்டுமே யோசிப்பார். அவற்றை எழுதத் தொடங்கி ஒன்றுக்கொன்று முடிச்சுப் போடும் போதுதான் கதைக் கரு என்ற ஒன்றே உருவாகும்.
மாரியக் என்ற எழுத்தாளர் எழுதத் தொடங்கிவிட்டால் அது முடியும் வரை எழுதிக் கொண்டே போவார். ஒரு நாவல், எந்தக் காரணத்துக்காகவும் ஒரு நிமிடம் கூட தடைபட்டு நிற்கக்கூடாது என்பது இவருடைய கொள்கையாகும். உணவு, உறக்கம் என எல்லாவற்றையும் மறந்து நாள் கணக்கில் இவர் நாவல்கள் எழுதியுள்ளார்.அன்டோனி பார்சன் என்பவர் துப்பறியும் நாவலாசிரியர். உணவுக்காகக் கூட தன் நாவலை இடையில் நிறுத்தி வைக்க மாட்டார். ஆனால், எழுதி முடித்த பின்பு வயிறு முட்ட உணவு சாப்பிட்டு விட்டு இரண்டு நாட்கள் தூங்குவாரம்.

எழுத்தாளர் ட்ரூமன் கபோட்

ட்ரூமன் கபோட், தான் எழுத நினைக்கும் கதையை வரிக்கு வரி சிந்தித்து மனதுக்குள் கற்பனையாக ஒரு முறை எழுதி விடுவாராம். அதன் பின்புதான் முதல் வரியையே எழுதத் தொடங்குவாரம்.

எழுத்தாளர் பெர்னார்ட் ஷா

ஜார்ஜ் பெர்னார்ட் ஷா ஒரு நாளைக்கு ஐந்து பக்கங்களுக்கு மேல் ஒரு வார்த்தை கூட எழுதமாட்டார். ஐந்தாவது பக்கம் எழுதி முடிக்கும்போது ஒரு வாக்கியம் பாதி எழுதப்பட்டிருந்தால் கூட, எழுதுவதை நிறுத்திவிட்டு அதை மறுநாள்தான் எழுதத் தொடங்குவார்.

எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ்

சார்லஸ் டிக்கன்ஸ் எழுதும்போது தன் எழுத்தில் உள்ள நகைச்சுவைப் பகுதியைப் படித்து தானே வயிறு குலுங்கச் சிரிப்பார். சோகமாக எழுதும்போது, அந்தப் பக்கம் முழுவதும் அவர் கண்ணீரால் நனைந்திருக்கும். அந்த அளவுக்கு உணர்ச்சிப் பிழம்பானவர்.

எழுத்தாளர் எட்கார்ட் வாலஸ்

எட்கார்ட் வாலஸ் என்பவர், வெள்ளிக் கிழமையில்தான் எழுத ஆரம்பிப்பாராம். வெள்ளி இரவு உணவு முடித்து பின் பேனாவைக் கையில் எடுத்தால், திங்கட் கிழமை காலை ஒன்பது மணிக்குள் முடித்து விடுவார். இடையில் உணவும் இல்லை தூக்கமும் இல்லை. கற்பனை வளத்துக்காக தேநீர் மட்டும் நிறையக் குடிப்பாராம்.

கவிஞர் ஷெல்லி

ஷெல்லி கவிதைகள் எழுதும்போது, அவருடைய வாய் எதையாவது மென்று கொண்டே இருக்கும். அப்பொழுதுதான் கறபனை தடைபடாமல் பெருக்கெடுத்து ஓடும்.இமானுவேல் பர்க் தனது கற்பனை வளம் குன்றும்போதெல்லாம் சூடான நீரில் கால்களை நனைத்துக் கொண்டே சிந்திப்பார். அப்பொழுதுதான் அவருக்கு கற்பனை சுரக்குமாம்!அப்பாஸ் என்ற எழுத்தாளர் மிகவும் இரைச்சலும் கூச்சலும் நிறைந்த மக்கள் சந்தடியுள்ள இடத்தில்தான் உட்கார்ந்து எழுதுவார். இதற்காகவே கூச்சல் மிகுந்த ஓட்டலை நாடிச் சென்று அங்கே அமர்ந்து எழுதுவாராம்!.

சனி, 14 அக்டோபர், 2017

துருவன் கதை

பராசரர் தொடர்ந்து கூறலானார் : மைத்ரேய முனிவரே! சுவாயம்புவ மநுவுக்குப் பிரியவிரதன் உத்தானபாதன் என்னும் இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களிலே உத்தானபாதனுக்கு சுருசி, சுநீதி என்னும் இரண்டு மனைவியர் இருந்தார்கள். அப்பத்தினிகளில் சுருசி என்பவள் தான் உத்தனபாதனுக்கு மிகவும் பிரியமுள்ளவளாக இருந்தாள். அவளுக்கு உத்தமன் என்று வழங்கப்பட்ட மகன் ஒருவன் இருந்தான். அவன் தகப்பனுக்கு மிகவும் பிரிய மகனாக இருந்தான். சுநீதியிடத்தில் அரசனுக்கு அவ்வளவு பிரியமில்லை. அந்தப் பெண்ணுக்குத் துருவன் என்ற மகன் பிறந்தான். அவன் நற்குண நற்செய்கைகளைக் கொண்டவன். ஒருநாள் சின்னஞ்சிறுவனான துருவன் தன் தந்தையான உத்தானபாத மன்னனின் அந்தப்புரத்திற்குச் சென்றான். அங்கே தனது தகப்பனது மடியில் தன் சகோதரன் உத்தமன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான். தானும் அவனைப் போல, தன் தகப்பன் மடியில் உட்கார வேண்டும் என்று துருவன் ஆசைப்பட்டு, தந்தையின் அருகே சென்றான். அப்போது சுருதி தன்னருகில் இருந்ததால், துருவனின் விருப்பத்தை அரசன் ஏற்கவில்லை. இவ்விதமாகத் தகப்பன் மடியின் மீது உட்கார வந்த சக்களத்தி மகனான துருவனைப் பார்த்து, சுருசி ஏளனமாகச் சிரித்து, பாலனே! நீ ஏன் வீண் முயற்சி செய்கிறாய்! என் வயிற்றில் பிறக்காமல் வேறொருத்தியின் வயிற்றில் பிறந்த நீ, இத்தகைய உயர்ந்த சிம்மாசனத்தில் இருக்க நினைப்பதா? விவேகமல்லாத நீ இந்த அரசனின் மகன் தான் என்றாலும், ராஜ்யலட்சுமி வாசம் புரியும் இந்தச் சிங்காசனத்துக்கு நீ தகுந்தவனல்ல. என் மகனே அதற்குத் தகுதியுடையவன், வீணாக ஏன் வருந்த வேண்டும். பாக்கியமில்லாத சுநீதி வயிற்றில் நீ பிறந்ததை நினைக்க வேண்டாமா? இங்கிருந்து போ! என்று இழிவாகக் கூறினாள். அவள் பேசியதைக் கேட்ட துருவன் கோபங்கொண்டு, மனக்கலக்கமடைந்து, சரேலென்று தன் தாய் வீட்டுக்குச் சென்றான்.

கோபமாகக் கண்கள் சிவக்க, உதடுகள் துடிக்க வந்த துருவனை அவனுடைய அன்னை சுநீதி தனது மடியில் உட்கார வைத்துக்கொண்டு, மகனே! உன் கோபத்துக்குக் காரணம் என்ன? உன்னை யார் சமாதானஞ் செய்வார்கள்? உன் தந்தையை யாராவது அவமதித்தார்களா? என்று கேட்டாள். அதற்குத் துருவன், தன் மாற்றாந்தாயான சுருசி கூறியவற்றையெல்லாம் தன் தாயிடம் சொன்னான். அதைக்கேட்ட சுநீதி, மகனே! சுருசி சொன்னவைகள் யாவும் உண்மைதான். நீ சொற்ப பாக்கியமுடையவன். ஏனென்றால் மிகவும் புண்ணியமுள்ள குழந்தை சத்துருக்களால் இப்படி தூற்றப்படுமோ? இத்தனையும் உன்னுடைய பூர்வ ஜன்ம நற்பலனை யாராவது அபகரிக்க முடியுமா? செய்யாத கர்ம பலனைக் கொடுக்கத்தான் யாரால் முடியும்? பாக்கியவான்களுக்கே, மகாராஜயோக்கியமான சிம்மாசனமும், ரதகஜதுரகபதாதிகள் போன்ற நால்வகை சேனைகளும் சுகபோகங்களும் கிடைக்கும். சுருசியானவள் பாக்கியசாலி! புருஷன் தன்னிடத்திலேயே பிரியமாக இருப்பதற்குப் பாக்கியஞ் செய்திருக்கிறாள். நானோ அவருக்கு மனைவி என்ற பெயரை மட்டுமே உடையவளாய் துக்கப்படுகிறேன். உத்தமன் புண்ணியம் செய்தவன். அதனால் தான் அவன் சுருசியின் மகனாகப் பிறந்தான். சொற்ப பாக்கியமுடைய நீ என் வயிற்றில் பிள்ளையாகப் பிறந்தாய் மகனே! இதற்கு நாம் என்ன செய்யலாம்? எவனுக்கு எந்த மட்டும் அதிர்ஷ்டமோ அந்த மட்டிலே அவன் மகிழ்ந்திருக்க வேண்டும். இதுதான் புத்திமான்களின் செயல். ஆகையால் ஐசுவரியத்தை நினைத்துத் துக்கப்படாமல் இரு! சுருசி சொன்னவைகளைக் கேட்டு உன் மனம் பொறுக்காவிட்டால் உனக்கும் அத்தகைய மேன்மையுண்டாவதற்குச் சகல முயற்சிகளையும் புண்ணியத்தையும் செய்ய எத்தனஞ்செய். தர்மாத்மாவாய், நல்ல நடத்தையுடையவனாய், சர்வபூத தயாபரனாகவும், சர்வஜனமித்திரனாகவும் இருந்து கொண்டு நல்லவற்றைச் செய்து வந்தால், தண்ணீர் பள்ளத்தை நாடிச்செல்வது போல், சம்பத்துக்களும் குணவானான மனிதனிடத்தில் தானாகவே வந்து சேர்கின்றன என்று சொன்னாள். அதைக்கேட்ட துருவன், தாயே! நீ சொன்ன வார்த்தைகள் சுருசி சொன்ன கொடிய நஞ்சினால் பிளந்த என் இதயத்தில் பதியவில்லை. ஐசுவரிய கர்வத்தால் அவளால் நிராகரிக்கப்பட்ட நான், மிகவும் உத்தமமான உயர்ந்த பதவியை அடைய எத்தனஞ் செய்கிறேன். பார்! புண்ணியசாலி என்ற சுருசியின் கர்ப்பத்தில் பிறவாமல், உன்னுடைய ரத்தத்திலே நான் பிறந்தவனானலும், என்னுடைய ஆற்றலைப் பார் என் அண்ணன் உத்தமனே என் தந்தையின் ராஜ்யத்தை அனுபவிக்கட்டும். நான் என்னுடைய சுயசக்தியினாலே அதைவிட உயர்ந்த பதவியை அடைவேன். ஒருவர் கொடுத்ததைப் பெற்று மகிழாமல் நானே முயன்று, என் தகப்பனுக்கும் அசாத்தியமான மிகவும் உயர்ந்த பதவியை எனது தவத்தினால் சம்பாதிக்கிறேன்! என்று சொல்லி தாயாரின் அனுமதியைப் பெற்று அங்கிருந்து அதிவிரைவாகப் புறப்பட்டு தலைநகரைக் கடந்து, அருகிலிருந்த ஒரு காட்டுக்குள் சென்றான்.

அங்கே, கறுப்பு மான் தோல்களைத் தரித்து குசப்புல்லை ஆசனமாகக் கொண்டு ஏழு முனிவர்களான சப்த ரிஷிகள் அமர்ந்திருந்தார்கள். அவர்களைக் கண்ட துருவன் வணங்கி, முனிவர்களே! நான் மன்னன் உத்தானபாதனுக்குச் சுநீதி வயிற்றில் பிறந்த மகன். துருவன் என்பது என் பெயர். நான் மிகவும் மனக்கவலையோடு தங்களது திவ்யசன்னதிக்கு வந்தேன் என்றான். ராஜகுமாரனே! நீயோ நாலைந்து வயதுள்ளவனாகவே இருக்கிறாய். இவ்வளவு சிறியவனான உனக்கும் மனக்கிலேசம் உண்டாகக் காரணம் என்ன? உன் தந்தை வாழ்ந்து கொண்டிருப்பதால் உன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற பாரமில்லையே! உன் ஆசைக்கு உரியபொருள் அகப்படவில்லையே என்று மன்னன் மகனான நீ வருந்த வேண்டியுமிராது! உன் உடம்பில் எந்தவிதமான நோயும் இருப்பதாக உன் தோற்றத்திலேயே தெரியவில்லை! அப்படியிருக்க உன் மன வெறுப்புக்குக் காரணம் என்ன? என்று சப்தரிஷிகள் கேட்டார்கள். என் தாய்க்குச் சக்களத்தியாகிய சுருதி சொன்ன வார்த்தைகளால் எனக்கு வெறுப்புண்டாயிற்று. அந்த அவமானத்தாங்காமல் இங்கு வந்தேன் என்றான். துருவன் அதைக் கேட்டதும் ஏழு முனிவர்களும் ஒருவருடன் ஒருவர் கலந்து இந்த சிறுவன் மாற்றாந்தாயின் பேச்சைப் பொறுக்கமாட்டாமல் இங்குவந்து விட்டான். இவனது ராஜகளையைப் பார்த்தீர்களா? இவ்வளவு சிறிய பையனுக்கும் அவமானம் பொறுக்க முடியவில்லையே, என்று பேசிக்கொண்டு, துருவனை நோக்கி, ராஜகுமாரனே, நீ மனஸ்தாபங்கொண்டு மனம் நொந்து என்ன செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறாய்! உனக்கு எங்களால் ஆகவேண்டிய உதவி என்ன? என்று கேட்டார்கள். துருவன் அவர்களை நோக்கி, முனிவர்களே! அடியேன்ராஜ்யத்தையோ அல்லது மற்ற பொருள்களையோ விரும்புகிறவன் அல்ல. ஆனால் பூர்வத்தில் ஒருவனாலேயும் அனுபவிக்கப்படாததாய், அபூர்வமானதாய், சகல ஸ்தானங்களுக்கும் உன்னதமானயிருக்கிற ஸ்தானத்தை நான் அடைய விரும்புகிறேன். இந்த மனோரதம் நிறைவேறுவதற்காக உபாயத்தை எனக்கு கூறியருள வேண்டும் என்றான். அதற்குச் சப்தரிஷிகள் ஒவ்வொருவராகப் பின்வருமாறு கூறினார்கள்.

அரசகுமாரனே! ஸ்ரீகோவிந்தனுடைய சரணாரவிந்தங்களையடைந்து ஆராதனை செய்யாதவர்களுக்கு, சர்வ உத்தமமான பதவி கிடைக்காது. ஆகையால் நீ பக்தியுடன், அச்சுதனை ஆராதிப்பாயாக! என்றார் மரீசி முனிவர். ராஜகுமாரனே! உலகநாயகனாக ஜனார்த்தனன் யாரைக் கடாட்சிக்கிறானோ அவனே, அக்ஷயமான திவ்விய ஸ்தானத்தை உடையவனாவான். என் வாக்கு சத்திய வாக்கென்று நினை! என்றார். அத்திரி முனிவர் ஆங்கிரசர், சராசராத்மகமான சகல பிரபஞ்சமும் எவனுடைய குட்சியில் இருக்கிறதோ, அந்தக் கோவிந்தனுடைய சரண கமலங்களை அர்ச்சனை செய்! சர்வ உன்னதப் பதவியை அடைவாய்! என்றார். பிறகு, புலஹ முனிவர், எவன் பரப்பிரமமும், பரமப்பிராப்பியமாகவும் சர்வ வியாபகனுமாக இருக்கிறானோ அந்த ஸ்ரீஹரியை ஆராதனம் செய்வதால், அத்தியந்தம் அசாத்தியமான மோட்சத்தையும் அடையலாம் என்றால் இதர ஸ்தானங்களை அடைவதற்கு என்ன சந்தேகம்? என்றார். அப்புறம் கிருதுமாமுனிவர் எவன் யக்ஞங்களாலே ஆராதிக்கப்படும் புருஷனாகவும், யக்ஞ சொரூபியாகவும், யக்ஞங்களுக்கு அதிபதியாகவும் இருக்கும் மகா புருஷனே, அந்த ஜனார்த்தனன் திருவுள்ளங்கொண்டானானால் அடையத் தகாத ஸ்தானமும் உண்டோ? என்றார். அதன் பிறகு, புலஸ்திய முனிவர், பூர்வத்திலே இந்திரன் ஜகத்பதியான எவனை ஆராதித்து சர்வ உன்னதமான இந்திரப்பதவியை அடைந்தானோ. அப்படிப்பட்ட யக்ஞேஸ்வரனான ஸ்ரீவிஷ்ணுவை ஆராதனை செய்! என்றார். பிறகு வசிஷ்ட முனிவர், குழந்தாய், ஸ்ரீவிஷ்ணு பகவானை ஆராதனை செய்வாயாகில் இதுவரையில் இல்லாத நூதனமான ஸ்தானம் ஒன்றை நீ மனத்தால் நினைத்தாலும், அதையும் சித்தமாக அடைவாய், அப்படியிருக்க முன்பே படைக்கப்பட்ட மூன்று உலகங்களுக்கும் உட்பட்ட மேலான ஸ்தானத்தை அடைவதற்குச் சந்தேகம் என்ன? என்று கூறினார். மாதவர்களே! தாங்கள் ஆராதக்க வேண்டிய அச்சுதனை அடியேனுக்குத் தெரியும்படி செய்தீர்கள், அவ்வெம்பெருமான் கிருபை செய்யும்படி ஜெபிக்க வேண்டிய மந்திரத்தையும் ஆராதனை செய்யும் முறைகளையும் அடியேனுக்கு அறிவிக்க வேண்டும் என்று துருவன் கேட்டான்.

ஓ ராஜபுத்திரனே! ஸ்ரீவிஷ்ணுவிடம் பக்தி செய்ய விரும்பும் மனிதன் முதலாவதாக விஷய அபிலாøக்ஷகளை நீத்து விட்டு மனதை நிர்மலமாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அந்த மனதை முகுந்தனுடைய சரணாரவிந்தங்களிலே தன்னுள்ளே நிச்சலமாகச் சேர்ந்து, வேறு நினைவில்லாமல் அந்தத் திருவடிகளையே பாவித்துக்கொண்டு, தூயவனாய், வியஷ்டி சமஷ்டி ரூபமாய் பிரகிருதியும் புருஷனும் சரீரமாகவுமுள்ள சுத்த ஞானமயனான வாசுதேவனுக்கு தெண்டன் சமர்ப்பிக்கிறேன் என்ற பொருளையுடைய மகாமந்திரத்தை ஜெபிக்க வேண்டும். உனது பிதாமகனான சுயாம்புவமநுவானவர் இந்த மகாமந்திரத்தினாலே ஜனார்த்தனனை உபாசித்தார். அதனால் பகவான் திருவுள்ளம் உகந்து, அந்த மநுவுக்கு அவர் விரும்பியபடியே திரிலோக துர்லபமான ஐசுவரியத்தைப் பிரசாதித்து அருளினார். நீயும் அப்படியே அந்த மகாமந்திரத்தை ஜெபித்து ஸ்ரீயப்பதியை ஆராதனை செய் என்று மகரிஷிகள் கூறினார்கள்.

Alankara benedict.