வெள்ளி, 2 நவம்பர், 2018

வழித்தடங்கள்

தமிழன் காசி அவர்களின் கவிதைகளில் எனக்கு பிடித்த கவிதை



முன்னால் செல்லுங்கள் ..
வழித்தடங்களை மறந்தவர்கள்   பின்னால் வருகிறோம்...

பாதையை மட்டுமல்ல
உங்களை போன்ற சிறப்புமிக்க வாழ்க்கை பயணத்தையும் தொலைத்தவர்கள் நாங்கள் ...



விடியசொல்லி கோழிகூவும் முன் விழித்துகொண்டவர்கள் நீங்க ...
அலாரத்தின் அலரல் சத்தத்தையும்  அலட்சியபடுத்திய உறக்கத்தில் நாங்க...

ஆடு மாடுகளோடு அடுத்தவங்க உணவுக்காக உழைச்சவங்க நீங்க...
ஆடு மாடுகளை உணவாக்கி உண்பதையே வேலையாக்கிட்டவங்க நாங்க...

அரை கோவணத்துடன் அடுதவர்களுக்காக  உங்களை நெய்துக்கொண்டவர்கள் நீங்க...
அடுத்தவர்களின் கோவணத்தையும் உறுவி அம்மணமாக்கி ஆனந்தபடுபவர்கள் நாங்க ... 

அன்பு ,பண்பு,பாசம் ,என அனைத்தையும் கலந்து கூட்டாக வாழ்ந்தவங்க நீங்க...
ஆத்தா அப்பனை அனாதையா விட்டுபுட்டு அடுக்குமாடி கூட்டுக்குள்ள அல்லல்படுகிறதை வாழ்க்கையாக்கிக்கிட்டவங்க நாங்க... 

பெத்த பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் தோள்பட்டைக்கு மேலே தூக்கி உண்மையான உலத்தை காட்டியவங்க நீங்க...
தள்ளியிருக்கும் அறைக்குள்ளே தன்னந்தனியாக பிள்ளைகளை கணினியில் உலகத்தை காண வச்சவங்க நாங்க ... 

உறவினரும் , ஊரும் வீடுமுதல் வீதி வரை ஒன்றுகூடி பத்தலிட்டு ,பலகாரம் செய்து  திருமணங்களை விழாவாக கொண்டாடியவங்க நீங்க...
ஓட்டலில் ஒதுக்கிதந்த ஒர்ரிடத்தில் அதிகபடியாக ஐம்பது பேரோடு கல்யாணம் முடிச்சவங்க நாங்க... 

விருந்து வைபவங்களை வீதிமுழுக்க பந்தி விரித்து ஓடியாடி பரிமாறி உண்டுமகிழ்ந்தவங்க நீங்க...
வரிசையில தட்டேத்தி வச்சதை வாங்கிக்கொண்டு ஓரமா நின்னபடி சாப்பிடட்டவங்க நாங்க... 

கைத்தொழில், விவசாயம்னு படிக்காத விஞ்ஞானிகள் நீங்க...
கான்வென்ட் கல்விபடிச்சி காசுக்காக ஐடி ஃபீல்டுல அடிமையானவங்க நாங்க...

நின்று நிதானமா நடந்து கால்தேய்து பாதுகாப்போடு பாதையமைச்சு பலர் பயணிக்க உதவியவங்க நீங்க...
காரில் வந்து பாதைமறைத்து கட்டடம்கட்டி வழிமறித்து வெளிவரமுடியாமல் பரிதவிக்கிறவங்க நாங்க...  

கடைசி கால இறப்பன்று ஊர்கூடி ஒப்பாரி வைத்து சுடுகாடு வரை சுமந்து சென்றவர்கள் நீங்க...
அடுத்த வீட்டுக்கும் தெரியாமல் அமைதியாக அமரர் ஊர்தியில் அனாதையாக போகபோறவங்க நாங்க...

முன்னால் செல்லுங்கள்...
வழித்தடங்களை மறந்தவர்கள்
பின்னால் வருகிறோம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக