செவ்வாய், 26 செப்டம்பர், 2017

குறுந்தொகை

குறுந்தொகை 84 KurunThogai 84

Her body is as warming cool as water lily expose in hugging I hugged my lover. A little span of time space passed. Then, again, I hugged her. “I am feeling perspired”, she added. (That is her intention, that I should hug her without break.)  

Her body is warming cold in sweet. That is like water-lily. There is a sweet fragrance in her body like that of smell in Vengai and forest-lily flowers; the flowers, specifically blossoming in the mountain Pothigai in the region of King ‘Ai’.

காந்தள்
இந்த மலர் போல் அவள் மேனி மணக்கும் வேங்கை மலர்
இந்த மலர் போல் அவள் மேனி மணக்கும் என் காதலியைத் தழுவினேன்.

சற்றே இடைவிட்டு மீண்டும் தழுவினேன்.

“நான் வியர்த்துப் போனேன்” என்று கூறினாள்.

(இடைவிடாமல் தழுவிக்கொண்டே இருக்கவேண்டும் என அவள் விரும்புகிறாள்)

அவள் ஈரமானவள்.

ஆம்பல் மலர் போல் குளுமையானவள்.

வேங்கை, காந்தள் மலர்கள் போல் மணக்கும் மேனி உடையவள்.

மழைமேகம் தவழும் பொதியமலை மலர்கள் போல் ஈரமானவள்.

கொடை வள்ளல் ஆய் அரசன் ஆளும் பொதியமலை போன்றவள்.

காலிலே வீரக்கழல் அணிந்த ஆய் அவன்.

எண்ணுவோம்

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்

அள்ளிக்கொண் டற்றே பசப்பு – திருக்குறள்.

பாடல் சொல் பிரிப்பு நிலை

பாலை

பெயர்த்தனென் முயங்க, ''யான் வியர்த்தனென்'' என்றனள்;

இனி அறிந்தேன், அது துனி ஆகுதலே

கழல்தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்

வேங்கையும் காந்தளும் நாறி,

ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே.

மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது.

மோசிகீரன் பாடல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக